வித்யார்த், லக்ஷணா, அனுஹாசன், ரமணா, அழகம் பெருமாள், வி.எம்.சி.ஹனீபா, 'அயன்' ஜெகன், மயில்சாமி
இசை
ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்
நந்து
தயாரிப்பு
ஜானகி சிவகுமார்

முன்ன பின்ன தெரியாத ஆளுங்களுக்கு ஜாமீன் போட்டா என்னவெல்லாம் விபரீதம் நேரிடும் என்பதை சொல்லும் கதை.
மதுபானக் கடையில் பணிபுரியும் நாயகன் வித்யார்த், ஒரு கைகலப்பில் சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அங்குள்ள காவல்துறை அதிகாரியான கொச்சின் ஹனீபா அவருக்கு வேறொரு தொழிலை கற்றுக் கொடுக்கிறார். போலி ரேஷன் கார்டு மூலம் குற்றவாளிகளை ஜாமீனில் எடுப்பதுதான் அந்த தொழில். வசூல் பணத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இப்படி போகிற பொழப்புல விழுகிறது மண். போலீஸ் சந்தேகத்தின் பேரில் பிடிக்கும் ஒருவனையும், தனக்குத் தெரிந்தவன் என சொல்லி காசு வாங்கி வெளியே விட வைக்கிறார் வித்யார்த். அவனோ மந்திரியை தீர்த்து கட்டி விட்டு தப்புகிறான். கொலையாளியுடன் வித்யார்த்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து போலீஸ் தேடுகிறது. ஹனீபா அவரை ரகசியமாக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார்.
சென்னை வரும் வித்யார்த் மதுக்கடையில் வேலைக்கு சேர்கிறார். பாரில் போதையில் விழுந்து கிடக்கும் அழகம் பெருமாளை வீட்டில் கொண்டு சேர்த்து அவர் குடும்பத்தாருடனும் நெருக்கமாகிறார். அப்போது வித்யார்த்தை கொல்ல ரவுடி கும்பல் முயற்சிக்கிறது. இதில் ஹனீபா கொல்லப்படுகிறார். போலீசும் வித்யார்த்தை துரத்துகிறது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வித்யார்த் எப்படி தப்புகிறார் என்பது மீதிக்கதை.
சென்னை வரும் வித்யார்த் மதுக்கடையில் வேலைக்கு சேர்கிறார். பாரில் போதையில் விழுந்து கிடக்கும் அழகம் பெருமாளை வீட்டில் கொண்டு சேர்த்து அவர் குடும்பத்தாருடனும் நெருக்கமாகிறார். அப்போது வித்யார்த்தை கொல்ல ரவுடி கும்பல் முயற்சிக்கிறது. இதில் ஹனீபா கொல்லப்படுகிறார். போலீசும் வித்யார்த்தை துரத்துகிறது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வித்யார்த் எப்படி தப்புகிறார் என்பது மீதிக்கதை.
படத்தின் டைட்டில் டிசைனில் பீர் பாட்டில்கள் டிசைன் வரும்போதே தெரிந்து விடுகிறது கதைக்களம் டாஸ்மாக்தான் என்று. கதாநாயகன் பாரில் வேலை செய்பவராகக்காட்டியதில் இயக்குநருக்கு எவ்வளவு சவுகரியம். குத்தாட்டம், மப்புக்காட்சிகள் என படம் ஒரே போதை மயம்தான்.
புதுமுகம் வித்யார்த்தான் நாயகன். தாதா கேரக்டர், வேலை வெட்டி இல்லாத ஆள் கேரக்டர் என்றாலே தலை சீவக்கூடாது, பரட்டையாக ஹிப்பி தலையோடு இருக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்தின் எழுதப்படாத சட்டத்தின் பிரகாரம் கெட்டப் போட்டிருக்கிறார். நடிப்பு சுமார்தான் என்றாலும் தனக்கு வாழ்வளித்த இன்ஸ்பெக்டர் கண்ணெதிரே இறந்து போனதும் அவர் எடுக்கிற மின்னல் வேக ஆக்ஷன் இருக்கிறதே, அது சண்டை பிரியர்களுக்கான விருந்து.
வித்யார்த்தின் காதலியாக வந்து போகும் லக்ஷணாவுக்கு பேருக்கேத்த மாதிரி லட்சணமான முகம்தான். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுக்கக்கூடிய அம்சம் இல்லை. இருந்தாலும் கன்னக்குழி அழகு, உதட்டழகு என முடிந்தவரை சமாளிக்கிறார்.
வில்லனாகியிருக்கிறார் ரமணா. கூவாகம் திருவிழாவில் பெண் வேடத்தில் அவரை காட்டும் போதுதான் தெரிகிறது. பார்ட்டி 'அந்த' ரகம் என்று. அந்த பார்வையும், பாடி லாங்குவேஜும், முரட்டு உதைகளும் பயங்கரம். ரமணா மனசு வைத்தால் வில்லன் வேடத்தில் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்கு கலக்கலாம். ஹனீபா நடிப்பு திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.
'இந்திரா' படப் புகழ் அனுஹாசன் டாக்டராக வந்து கண்ணியமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது டிரஸ்ஸிங் சென்ஸ் அற்புதம். காமா சோமா என்று உடை உடுத்தும் நடிகைகளுக்கு நல்ல ஒரு படிப்பினை இவரது கவுரவமான உடைகள்.
தண்ணி அடித்த நபர் ஒருவர் வித்யார்த்துக்கு 100 ரூபாய் டிப்ஸ் வைப்பதும், பின் டிப்ஸ் வைத்தவரின் குழந்தை சாப்பாட்டுக்கு கதறுவதும் டச்சிங் சீன். 'ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க பாட்டு' ரீ மிக்ஸா இருந்தாலும் பிக்சரைசேஷனில் மனம் கவர்கிறார்கள்.
'அயன்' ஜெகன், மயில்சாமி கூட்டணியின் காமெடி சிரிக்க வைக்கிறது. தலைப்புக்கு ஏற்ப இன்னும் வலுவாக ஆக்ஷன் சீன்களை தொகுத்து இருக்கலாம். கதை மதுக்கடையிலும், அனுஹாசன் வீட்டிலும் வெகு நேரம் முடங்குவதை தவிர்த்து இருக்கலாம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சொல்லிக்கிற மாதிரியில்லை. ஒளிப்பதிவாளர் சசிகுமார் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார். கையை கட்டிப் போட்டுவிட்டு கத்தரியை கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. இருந்தும் இல்லாமலிருக்கிறார் எடிட்டர்.
அறிமுக இயக்குநர் நந்து திரைக்கதையில் சுவாரஸ்யமான காட்சிகளை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக செல்ல வைத்திருக்கிறார். அதோடு இரட்டை அர்த்த வசனக்காட்சிகளையும் தவிர்த்து கண்ணியமாக காட்சிகளை கையாண்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
தொட்டுப்பார் - ஒரப்பில்லாத ஊறுகா!
No comments:
Post a Comment